Sunday, 9 September 2012

மாற்றம் தேவை...மாணவர்களிடம்...


மாற்றம் தேவை...மாணவர்களிடம்...
மலேசிய கல்விக் கொள்கையில் மாற்றம் வருமா என ஆசிரியர் வர்க்கம் காத்திருப்பது என்னவோ உண்மைதான்...ஆனால் அந்த ஏக்கம் இன்னும் கொஞ்ச நாளில் பெரும் தலைவலியை மாறுமோ என்ற பயம் கொஞ்ச நாளாகவே எனக்குள் இருந்தது...இன்று முடிவே பண்ணிட்டேன்...நிச்சயம் நடக்கும்....நாளுக்கு நாள் மாணவர்களை விட நாங்கள்( ஆசிரியர்கள்) சுமந்து செல்லும் கோப்புகளின் பையின் பாரம் தாங்க முடியவில்லை...சில நேரங்களில் எங்கள் மகிழுந்து முழுக்க புத்தகம் தான்..பள்ளியில் குமாஸ்தா வேலைக்கே நேரம் சரியாய் இருக்கே...சில நேரம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நான் ஒண்ணுமே செய்யலேன்னு பல நாள் வருத்தப்பட்டதுண்டு...வாங்கற சம்பளத்துக்கு வேலை நிறையவே தான் செய்யறேன்...ஆனால் சொல்லி கொடுத்தேன்கிற திருப்தி இல்லையே....
Akta Pelajaran, Laporan Kabinet, Laporan Rahman Talib, Dasar Pendidikan Negara என நீண்டு கொண்டே போகிற வரிசையில் விரைவில் புதிய கொள்கை அறிவிப்பு வருகிறதாம்... கல்விக் கொள்கைகள் நிரம்ப மேம்படும் ஆனால் எங்கள் மாணவ செல்வங்களின் போக்கோ  சிறிதும் மாறுவதில்லை..மாறுமா என எங்களுக்கும் தெரியலை...
என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கலே...
அது அப்படித்தான்...

Friday, 7 September 2012

" ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்டதாய் "
அழகாக சொன்னார் தெய்வப்புலவர்...அந்த இன்பம் தாயிற்கு மட்டும் தானா?
தன்னை அர்ப்பணித்து தன் கடமை செய்த ஆசிரிய வர்க்கத்திற்கும் அல்லவா?
என் மாணவி இன்று சொன்னாள்...
ஆசிரியர் பணியே அறப்பணி! அதற்கு உன்னை அர்ப்பணி!அவள் சாதாரணமாகத்தான் சொன்னாள்...ஆனால் இன்றைய பொழுதின் சந்தோசம் என் தொழிலின் மேல் எனக்கு இருந்த சின்னஞ்சிறு வலிகளுக்கும் மருந்திட்டுப் போனது...
என் மாணவன் ரஷிகேஷ் ராமகிருஷ்ணனின் ஆங்கில கட்டுரை எலிசபெத் மகாராணியின் வைரவிழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை எண்ணி என் மனம் ஆனந்த தாண்டவம் ஆடிய வேளை இன்று....அதை என்னிடம் சொன்ன பொழுது அக்காவின் (அவன் தாய்) கண்களில் ஆனந்தம் மின்னுவதை கண்டேன்....வியந்தேன்....
சொல்ல முடியாத...வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத  சந்தோசம் அது....ஒரு கணம் அந்த தாயாய் வாழ மனம் துடித்தது...
நன்றியுடன்  விடைபெற்றேன்...

Wednesday, 5 September 2012

பிரசவ வலி....
எழுதும்பொழுது தலைப்பு பாரம் மிகுந்ததாக இருந்தது ஆனால் மனம் சந்தோசத்தில் ஆனந்த தாண்டவம் ஆடியது...
ஒரு குழந்தையைப் பெற்ற நிம்மதி எப்படி இருக்குமோ அறியேன்!
முதல் தடவை ப்ளாக் எழுத தூண்டிய எழுத்தாளர் பாலமுருகனுக்கு நன்றி....