Sunday, 9 September 2012

மாற்றம் தேவை...மாணவர்களிடம்...


மாற்றம் தேவை...மாணவர்களிடம்...
மலேசிய கல்விக் கொள்கையில் மாற்றம் வருமா என ஆசிரியர் வர்க்கம் காத்திருப்பது என்னவோ உண்மைதான்...ஆனால் அந்த ஏக்கம் இன்னும் கொஞ்ச நாளில் பெரும் தலைவலியை மாறுமோ என்ற பயம் கொஞ்ச நாளாகவே எனக்குள் இருந்தது...இன்று முடிவே பண்ணிட்டேன்...நிச்சயம் நடக்கும்....நாளுக்கு நாள் மாணவர்களை விட நாங்கள்( ஆசிரியர்கள்) சுமந்து செல்லும் கோப்புகளின் பையின் பாரம் தாங்க முடியவில்லை...சில நேரங்களில் எங்கள் மகிழுந்து முழுக்க புத்தகம் தான்..பள்ளியில் குமாஸ்தா வேலைக்கே நேரம் சரியாய் இருக்கே...சில நேரம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நான் ஒண்ணுமே செய்யலேன்னு பல நாள் வருத்தப்பட்டதுண்டு...வாங்கற சம்பளத்துக்கு வேலை நிறையவே தான் செய்யறேன்...ஆனால் சொல்லி கொடுத்தேன்கிற திருப்தி இல்லையே....
Akta Pelajaran, Laporan Kabinet, Laporan Rahman Talib, Dasar Pendidikan Negara என நீண்டு கொண்டே போகிற வரிசையில் விரைவில் புதிய கொள்கை அறிவிப்பு வருகிறதாம்... கல்விக் கொள்கைகள் நிரம்ப மேம்படும் ஆனால் எங்கள் மாணவ செல்வங்களின் போக்கோ  சிறிதும் மாறுவதில்லை..மாறுமா என எங்களுக்கும் தெரியலை...
என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கலே...
அது அப்படித்தான்...

0 comments:

Post a Comment